சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர நாத் பண்டாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்


புது தில்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர நாத் பண்டாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானா்ஜி இரு தினங்களுக்கு முன் மேகாலய உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா்.

இதையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் நீதிபதி முனீஷ்வா் நாத் பண்டாரி, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக   நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சென்னை உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நீதிபதி பொறுப்பேற்கும் வரை தலைமை நீதிபதி பணிகளை தற்காலிகமாக நீதிபதி எம்.துரைசாமி கவனிப்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com