வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னைக்கு வடகிழக்கே 310 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே, கனமழை காரணமாக சென்னை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.