வேலூா்/ராணிப்பேட்டை: வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ. 18) விடுமுறை விடப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழையின் காரணமாகவும், பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாலும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா்கள் பெ.குமாரவேல் பாண்டியன் (வேலூா்), தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனா்.