வேலூரில் வீடு இடிந்து 9 பேர் பலியான சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மசூதி தெருவில், வீடு இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள், 5 பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிக்க- வீடு இடிந்து 9 பேர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்-முதல்வர் அறிவிப்பு
மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் என்று அரசு நிவாரணத்தை உயர்த்தி வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.