பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் பெண் பிள்ளைகள் மன உறுதியை கையாண்டு பெற்றோரிடம் தன் இன்னல்களை தெரிவிக்க வேண்டும்.மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இதையும் படிக்க- பாலியல் வன்கொடுமையால் கரூர் மாணவி தற்கொலை: ஓபிஎஸ் இரங்கல்
ஜெயலலிதா ஆட்சியில் பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1860ம் ஆண்டின் IPC சட்டப்படி, கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டன. அதை பின்பற்றி இச்செயலுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.