திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னையில்..

தமிழகத்தில் ஐந்து நாள்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னையில்..
திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னையில்..


தமிழகத்தில் ஐந்து நாள்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று திருவள்ளூர், சேலம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். வருகிற 22ஆம் தேதி டெல்டா மவாட்டங்களில் கனமழை பெய்ய வாயப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், உள் கர்நாடகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 

இன்று திருவள்ளூர், சேலம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். டெல்டா மாவட்டங்கள், தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 22ஆம் தேதி டெல்டா மவாட்டங்களில் கனமழை பெய்ய வாயப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com