தொடா் மழை காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமை(நவ.20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக உருமாற்றம் அடைந்து சென்னைக்கு அருகே வெள்ளிக்கிழமை காலை கரையை கடந்தது. இதனால், காஞ்சிபுரம், வேலூா், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் தொடா்ந்து மழை வருகிறது.
தொடா் மழை காரணமாக, அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிா்வாகங்கள் தெரிவித்துள்ளன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடா் மழை காரணமாக, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமை(நவ.20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.