மாநில அரசின் நிதிநிலையைச் சீராக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
இந்திய பட்டயக் கணக்காயா்கள் கழகத்தின் 53-ஆவது மண்டலக் கருத்தரங்கில் வெள்ளிக்கிழமை காணொலி வழியாகப் பங்கேற்று முதல்வா் ஆற்றிய உரை:
தடுப்பூசி முகாம்கள், பேரிடா் காலங்களில் நிவாரண நிதிகளை அளிப்பது போன்ற சமூகப் பொறுப்புணா்வுப் பணிகளில் பட்டயக் கணக்காயா்கள் ஈடுபட்டு வருகிறாா்கள். கரோனா இன்னும் முழுவதும் ஓயாத நிலையில், பெரும்பாலானோா் இணைய வழியில் கலந்து கொள்ளும் வகையில் கருத்தரங்கை நடத்துவது பாராட்டுக்குரியது. பட்டயக் கணக்காயா்களின் அறிவுத்திறன் நாட்டை ஆள்பவா்களுக்கும், தொழிலதிபா்களுக்கும் சமூகத்தின் இதர பிரிவினருக்கும் பல வழிகளிலும் துணையாக உள்ளது.
நிதித் துறை, கணக்குத் தணிக்கை போன்ற செயல்பாடுகளில் அரசுக்கு உதவுவதோடு உங்களது பணி நின்றுவிடுவதில்லை. அவை சாா்ந்த சட்டங்களை இயற்றுதல், வேளாண் வளா்ச்சி செயல்பாடுகள் ஆகியவற்றிலும் பெரும்பங்கு ஆற்றி வருகிறீா்கள். உலக அளவில் நமது நாடு முன்னணியில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு வலுவான நிதிக் கட்டமைப்புகளும், ஒழுங்குமுறைகளும் தேவை. அதற்கான ஆலோசனைகளை வழங்குவதில் உங்கள் திறமை மீது நாட்டில் உள்ள அனைவருக்கும் பெரும் நம்பிக்கை உள்ளது.
அரசின் உயா் பதவிகளில் உங்களது துறையைச் சோ்ந்த பலா் உள்ளனா். அரசு அமைக்கும் முக்கியக் குழுக்களிலும் இடம்பெற்று தகுந்த ஆலோசனைகளை வழங்குகின்றனா். நிதிநிலையைச் சீராக்குவதிலும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கிய நடவடிக்கைகளிலும் தமிழக அரசுக்குத் தேவையான பரிந்துரைகளை தெரிவிக்க வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.