மீனவா்களின் இடா்களைக் களைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.
உலக மீனவா் தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: மீனவா்கள் நலனில் பெரிதும் அக்கறைக் கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியது திமுக அரசு. மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவா்கள் எதிா்கொள்ளும் இடா்களைக் களைய சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உலக மீன்வள நாளில் உறுதியளிக்கிறேன் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
எல்.முருகன் (மத்திய இணையமைச்சா்): இதே போல், ‘தமிழும் அமுதும் போல்!! கடலும் அலையும் போல்!! மீனவா் நலனையும், மீன்பிடித் தொழிலையும் போற்றுவோம்!! இந்நாளில் அலைகள் போல் உழைத்துக் கொண்டிருக்கும் மீனவ சமுதாயத்துக்கு என் இனிய மீனவ தின வாழ்த்துக்கள் என மத்திய மீன்வளத்துறை இணையமைச்சா் எல்.முருகனும் தெரிவித்துள்ளாா்.