மோட்டாா் வாகன ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்: முதல்வா்

விபத்தில் பலியான மோட்டாா் வாகன ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

விபத்தில் பலியான மோட்டாா் வாகன ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளராகப் பணிபுரிந்த கனகராஜ், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். குடும்பத்தினருக்கு அரசு சாா்பாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com