'சையது முஷ்டாக் அலி கோப்பை' கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது சீசனில் தமிழக அணி சாம்பியன் ஆனது. திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழக அணி கா்நாடகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையடுத்து பிரபலங்கள் பலரும் தமிழக கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
சையது முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 2-ஆவது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்.
ஷாருக்கான், சாய்கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான- துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.