அவிநாசி: அவிநாசி அருகே எம். நாதம்பாளையத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை அதிகாலை படுகாயமடைந்தனர்.
இதையும் படிக்க | ரோந்து போலீஸாா் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி : டிஜிபி
பெங்களூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கோவை-சேலம் ஆறு வழிச்சாலை அவிநாசி நாதம்பாளையம் பிரிவு அருகே வரும்போது சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அவிநாசி அருகே எம். நாதம்பாளையத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.
இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.