தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 744 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 14 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 741 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை (நவ.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,01,624 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 744 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,22,506-ஆக அதிகரித்துள்ளது.