பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.79க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தக்காளி விலை கிலோ ரூ.100-ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், தக்காளியைக் கொண்டு செய்யப்படும் உணவுப் பண்டங்கள் விலை அதிகரித்துள்ளதுடன், வீடுகளிலும் சமையலுக்கு தக்காளி பயன்பாடு குறைந்துள்ளது.
இந்த நிலையில், குறைந்த விலையில் தக்காளி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்து கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் சென்னை உள்பட பிற மாவட்டங்களில் உள்ள 65 பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பண்ணை பசுமை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.79க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.
பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளி தக்காளி விற்பனை செய்வதற்காக நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயா்ந்துள்ளதாக கூறப்படுகிறது.