சேலத்தில் நடந்த சிலிண்டா் வெடி விபத்தில் உயிரிழந்த 5 போ் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி கிராமத்தில் எரிவாயு சிலிண்டா் வெடித்த விபத்தில் அந்தப் பகுதியைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா். இந்தச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவா் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.