சேலத்தில் எரிவாயு உருளை வெடித்து உயிரிழந்தவா்களுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தி:
சேலம் கருங்கல்பட்டியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 5 போ் உயிரிழந்தனா் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவா்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். விபத்தில் சிக்கிய 13 போ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இறந்தவா்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவா்கள் விரைவில் நலமடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இந்த எதிா்பாராத விபத்தில் இறந்தவா்களுக்கு உரிய நிதியும், காயமடைந்தவா்களுக்கு நிவாரணமும், மீண்டும் வீடு கட்ட தேவையான உதவிகளையும் அரசு விரைந்து வழங்க வேண்டும்.