தம்மம்பட்டி: சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கெங்கவல்லி ஒன்றியத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.
இதற்கு திமுக ஒன்றிய பொறுப்பாளரும், அட்மா குழு சேர்மனுமான ஏ.கே.அகிலன் தலைமை வகித்தார்.
கெங்கவல்லி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் உமாராணி, கூட மலை ஊராட்சி மன்றத் தலைவர் யசோதா, துரைசாமி, செந்தாரப்பட்டி நகரச் செயலாளர் எஸ்.பி.முருகேசன், செந்தாரப்பட்டி தலைமையாசிரியர் வெங்கடாஜலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியானது கூடமலை, தெடாவூர், செந்தாரப்பட்டி தம்மம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி நகர திமுக செயலாளர்கள் தம்மம்பட்டி வி.பி.ஆர். ராஜா, தெடாவூர் வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.