காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு குறைவு: வானிலை மையம்

வங்கக் கடலில் நிலவி வரும் காற்று சுழற்சியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்
வானிலை மையம்

வங்கக் கடலில் நிலவி வரும் காற்று சுழற்சியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் இதன் காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காற்றழுத்த சுழற்சியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதற்காக வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக தற்போது வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், காற்றழுத்த சுழற்சி தொடர்ந்து நீடிக்கும் என்பதால் அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com