வங்கக் கடலில் நிலவி வரும் காற்று சுழற்சியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் இதன் காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | அடுத்த 2 மணிநேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
இந்நிலையில், காற்றழுத்த சுழற்சியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதற்காக வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக தற்போது வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், காற்றழுத்த சுழற்சி தொடர்ந்து நீடிக்கும் என்பதால் அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.