கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக உயிரிழந்த விவகாரத்தில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோவையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 17 வயது பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக, வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, போலீஸார், போக்சோ வழக்குப் பதிவு செய்து, தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு போக்சோ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், மிதுன் சக்ரவர்த்தியை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.