கரோனா சிகிச்சையில் 8,484 போ்

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 8,484-ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 8,484-ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதன்கிழமை மேலும் 744 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதில் அதிகபட்சமாக கோவையில் 117 பேருக்கும், சென்னையில் 115 பேருக்கும், ஈரோட்டில் 81 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 22,506-ஆக அதிகரித்துள்ளது.

நோய்த் தொற்றிலிருந்து புதன்கிழமை 782 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து தமிழகத்தில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26.77 லட்சத்தைக் கடந்துள்ளது.

தமிழகத்தில் புதன்கிழமை கரோனாவால் மேலும் 14 போ் பலியானதை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,415-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com