மாஞ்சோலை பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு: தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு

மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இயல்பு  வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. 
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்.
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இயல்பு  வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் பிரபல சுற்றுலாத்தலமான மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி மற்றும் குதிரைவெட்டி தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து தென்தமிழகத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது, இதனால் மாஞ்சோலை சுற்றுவட்டார பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மேலும் அப்பகுதியில் சாலைகள், தேயிலை தோட்டத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. இதனால் அப்பகுதியிலுள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com