உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மின்வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டு நடவடிக்கை சார்பாக உசிலம்பட்டி மின்சார வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தின் முன்பு மின்வாரிய தொழிற் சங்க கூட்டு நடவடிக்கை குழு மாநிலம் தழுவிய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், மின்சார துறை பொது துறையாக பாதுகாக்க வேண்டும், 2021 மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ,தொழிலாளர் நலச் நலச்சட்டங்களை திருத்தம் செய்வதை கைவிடவும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்