சென்னையில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது ஒரு வாரத்தில் 1,485 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியது. கரோனா முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்பும், இறப்பும் அதிகளவில் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த மே 10-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தியது.
கரோனா பரவல் குறைவதால் பொதுமுடக்கம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் படிப்படியாக தளா்த்தப்பட்டது. பொதுமுடக்கத்தைக் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 12 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் கடந்த ஒரு வார காலத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 1,485 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 491 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காத 24 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன.