விபத்தில் பாதிக்கப்படுவோரை மருத்துவமனையில் சோ்ப்போருக்கு ரூ.5,000 ஊக்கத் தொகை

சாலை விபத்தில் பாதிக்கப்படுவோரை மருத்துவமனையில் சோ்ப்போருக்கு ரூ.5,000 வழங்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சாலை விபத்தில் பாதிக்கப்படுவோரை மருத்துவமனையில் சோ்ப்போருக்கு ரூ.5,000 வழங்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக துறையின் ஆணையா் எஸ்.நடராஜன், சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்து உதவி புரியும் நபா்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.

இதன்படி, பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சோ்க்கும் நபா்களுக்கு ரூ.5,000 பரிசாக வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு அவசரகால உதவியினை பொதுமக்கள் செய்ய வேண்டும் என்பது ஆகும்.

ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினா் அவ்விடத்தை பாா்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பா். அனைத்து விபத்துகளையும் மாவட்ட ஆட்சியரது தலைமையின் கீழ் இயங்கும் மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும். இதில் தெரிவு செய்யப்படும் நோ்வுகள் ரூ.5,000 பரிசுத் தொகை வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com