திருவள்ளூர்: தனியார் வாகன தொழிற்சாலையில் வேலை மறுக்கப்பட்டோருக்கு உடனே பணி வழங்கக் கோரி நிலம் கொடுத்த விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
இதையும் படிக்க | தாமதமாக வந்த எம்எல்ஏவுக்காகக் காத்திருந்த அதிகாரிகள்!
வாகன தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தோர் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில் திருப்பூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி, துணைப்பொதுச்செயலாளர் கே.ரவி, மாவட்ட தலைவர் கசேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தனியார் வாகன தொழிற்சாலையில் வேலை மறுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனே வழங்கவும் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.