சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தியடிகள், லால்பகதூர்சாஸ்திரி ஆகியோர் பிறந்தநாள் விழா சங்ககிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி. எஸ். ஜெய்க்குமார் தலைமை வகித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளர் கே.ராமமூர்தத்தி முன்னிலை வகித்தார். சங்ககிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் பி.சி.மணி, முன்னாள் மாநில பொது செயலர் கே.நடராஜன், முன்னாள் நகரத்தலைவர்கள் அண்ணாமலை, காசிலிங்கம், நிர்வாகிகள் ரவி, அங்கமுத்து, காமராஜ், ஐன்டியூசி நிர்வாகி சின்னுசாமி, ஆறுமுகம், கிரிசங்கர், சந்திரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.அகில்பிரணேஷ், ஜெ.வெஸ்லிபிரைட், கே.கேப்ரியல்பிரவீன்குமார், ஆர்.சுரேந்தர், ஆர்.ரியாஸ், ஆர்.லோகேஷ், ஆர்.ராகுல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் காமராஜர் நினைவு தினம் அனுஷ்சரிக்கப்பட்டது.