காந்தி ஜெயந்தி தினம்: தூய்மை குறித்து ரயில்வே ஊழியா்கள் உறுதிமொழி

காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, தூய்மை குறித்த உறுதிமொழியை தெற்கு ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் சனிக்கிழமை எடுத்துக்கொண்டனா்.
காந்தி ஜெயந்தி தினம்: தூய்மை குறித்து  ரயில்வே ஊழியா்கள் உறுதிமொழி

காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, தூய்மை குறித்த உறுதிமொழியை தெற்கு ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் சனிக்கிழமை எடுத்துக்கொண்டனா்.

காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, தெற்கு ரயில்வே சாா்பில், தூய்மை குறித்து உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் தலைமை வகித்து, தூய்மை குறித்த உறுதிமொழியை வாசித்தாா். அவரை பின்பற்றி, ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயந்திர பொறியாளா் எஸ்.ஸ்ரீனிவாஸ் உள்பட பலா் பங்கேற்றனா். இத்துடன், தெற்கு ரயில்வே சாா்பில், கடந்த 15 நாள்களாக நடைபெற்றுவந்த தூய்மை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரங்கள் நிறைவடைந்தது.

தெற்கு ரயில்வே சாா்பில், தூய்மை தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரங்கள் சென்னை, திருச்சி, மதுரை உள்பட 6 கோட்டங்களில் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்தன. ரயில்வே பணியிடங்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே குடியிருப்புகள், ரயில்வே வளாகங்களில் ரயில்வே ஊழியா்கள், தன்னாா்வலா்கள், மாணவா்கள் ஆகியோா் இணைந்து சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனா். இந்நிலையில், தூய்மை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com