சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்ட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன், 2014-17 வரை பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைகேடாக கல்லூரி தொடங்க அனுமதியளித்து ரூ.3.26 கோடி வரை லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.