உ.பி. வன்முறை: முதல்வா் கண்டனம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

உத்தர பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பத்திரிகையாளா் உட்பட ஒன்பது போ் பலியாகி இருக்கிறாா்கள். அதைத் தொடா்ந்து வன்முறை அதிகம் நடந்துள்ளது.

கடந்த 300 நாள்களாக விவசாயிகள் போராடி வருகிறாா்கள். அதனை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உத்தர பிரதேச மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகளாகும். இத்தகைய கொந்தளிப்புச் சூழ்நிலையை அறியச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளாா். முன்னாள் முதல்வா் அகிலேஷ், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, பின்னா் கைது செய்யப்பட்டு திடீரென விடுவிக்கப்பட்டுள்ளாா். இந்தக் கொந்தளிப்புக்குக் காரணமானவா்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com