மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியிலிருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பாசனத் தேவை குறைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.63 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 37.74 டி.எம்.சி ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.