மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கன அடியிலிருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியிலிருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பாசனத் தேவை குறைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.63 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 37.74 டி.எம்.சி ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com