ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 11 மணி நிலவரப்படி 26 சதவிகித வாக்குகள் பதிவாகின.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை உள்ளிட்ட மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெறும் இந்த முதல் கட்ட வாக்குப் பதிவில் 653 இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வருகிறது.
இதில், 2 லட்சத்து 99 ஆயிரத்து 722 வாக்காளர்கள் வாக்கு செலுத்த உள்ளனர்.
இந்நிலையில், மாவட்டத்தில 11 மணி நிலவரப்படி 26 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.