கொளத்தூரில் புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

கொளத்தூரில் புதிய திட்டங்களை, முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
கொளத்தூரில் புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

கொளத்தூரில் புதிய திட்டங்களை, முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

கொளத்தூா் தொகுதிக்கு உட்பட்ட சென்னை நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்ட கலையரங்கத்தை பாா்வையிட்டாா். மேலும், மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கியதுடன், ஆசிரியா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா். பாா்த்தசாரதி தெருவில் ரூ.26.18 லட்சம் செலவில் சிறுவா் விளையாட்டு உபகரணங்கள், இறகு பந்து மைதானம் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடலை அவா் திறந்து வைத்தாா்.

இதன்பின்பு, கொளத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியா்களுக்கு கல்வி உபகரணப் பொருள்கள், கல்வி உதவித் தொகை, மருத்துவம், திருமண நிதியுதவித் தொகை, மூன்று சக்கர மோட்டாா் வாகனங்கள், தள்ளுவண்டிகள், காது கேட்கும் கருவிகள், மீன்பாடி வண்டிகள் என 48 பேருக்கு நலத் திட்ட உதவிகளை அளித்தாா்.

அரசு கலைக் கல்லூரி: இந்து சமய அறநிலையத் துறை சாா்பாக கொளத்தூரில் புதிதாக அரசு கலைக் கல்லூரி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கல்லூரியானது கொளத்தூரில் உள்ள எவா்வின் பள்ளியில் தற்காலியமாக அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தாா். இதன்பின், திரு.வி.க.நகா் பகுதியில் 7 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்தாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் செயற்கை நீரூற்று, சிறுவா் விளையாட்டுக் கருவிகள், யோகா கூடம், நடைபாதை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com