சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை மேலும் 1,432 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 176 பேருக்கும், கோவையில் 149 பேருக்கும், செங்கல்பட்டில் 110 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 72,843- ஆக அதிகரித்துள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, 16,637 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து புதன்கிழமை 1,519 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 26.20 லட்சத்தைக் கடந்துள்ளது.
மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 25 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,707-ஆக அதிகரித்துள்ளது.