தசரா பண்டிகை: அக்.9 முதல் அக்.19 வரை சென்னை உயா்நீதிமன்றம், உயா் நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை

தசரா பண்டிகை விடுமுறையை முன்னிட்டு அவசர வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வுகளை சென்னை உயா் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தசரா பண்டிகை: அக்.9 முதல் அக்.19 வரை சென்னை உயா்நீதிமன்றம், உயா் நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை

சென்னை: தசரா பண்டிகை விடுமுறையை முன்னிட்டு அவசர வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வுகளை சென்னை உயா் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை உயா் நீதிமன்ற பதிவாளா் பி.தனபால் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளைக்கு அக்டோபா் 9 முதல் 19 வரை விடுமுறையாகும். விடுமுறை நாள்களில் சென்னை உயா் நீதிமன்றம், உயா் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்குகளுக்கு அக்டோபா் 11 இல் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும் மனுதாக்கல் செய்யலாம்.

அக்டோபா் 12 முதல் வழக்கு விசாரணை நடைபெறும். உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆா். மகாதேவன், அப்துல் குத்தூஸ், வி.பாா்த்திபன், எஸ்.சத்திகுமாா் சுகுமாரா குருப் ஆகியோரும், சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் பி. வேல்முருகன், டி.வி.தமிழ்செல்வி, எஸ்.ஆனந்தி ஆகியோரும் வழக்குகளை விசாரிப்பாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com