வெள்ளிக்கிழமை தேக்கடி ஏரியில் நீந்திச் சென்ற தந்தம் வைத்த யானை.
வெள்ளிக்கிழமை தேக்கடி ஏரியில் நீந்திச் சென்ற தந்தம் வைத்த யானை.

தேக்கடி ஏரியில் கரையை கடந்த யானை: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தேக்கடி ஏரியில் யானை கரையை கடந்து சென்ற அழகான காட்சியை பார்த்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

கம்பம்: தேக்கடி ஏரியில் யானை கரையை கடந்து சென்ற அழகான காட்சியை பார்த்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

முல்லைப் பெரியாறு அணை தண்ணீரில் தேக்கடி ஏரி அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை முதல் டிரிப் படகு போக்குவரத்து சுற்றுலாப்பயணிகள் சென்றது. அப்போது இரண்டு பெரிய தந்தங்களுடன் பெரிய யானை ஒன்று, முல்லைப் பெரியாறு அணை அருகே  ஒரு கரையிலிருந்து  மறுகரைக்கு அழகாக நீந்திச் சென்றது.

இதைப்பார்த்த சுற்றுலா படகு ஓட்டுநர் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவித்தார், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் செல்லிடப்பேசியில் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து உற்சாகமடைந்தனர்.

மிகப்பெரிய உருவம் கொண்ட  யானை ஏரியில் மிக அழகாக நீந்தி மறுகரையில் ஏறிச் சென்றதை சுற்றுலா  பயணிகள் பார்த்து ரசித்தனர்.

யானை கரையேறி வனப்பகுதிக்குள் சென்றபின் சுற்றுலா படகு சென்றது இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com