நீட் தேர்வு தாக்கம்: ஏ.கே.ராஜன் அறிக்கை 7 மொழிகளில் மொழிபெயர்ப்பு

நீட் தேர்வு தாக்கம் குறித்த ஏ.கே.ராஜனின் அறிக்கை தமிழ், இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தாக்கம்: ஏ.கே.ராஜன் அறிக்கை 7 மொழிகளில் மொழிபெயர்ப்பு

நீட் தேர்வு தாக்கம் குறித்த ஏ.கே.ராஜனின் அறிக்கை தமிழ், இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசு அத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக நீட் தோ்வில் உள்ள பாதகங்களை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா், மருத்துவக் கல்வி இயக்குநா் உள்பட 9 போ் அடங்கிய உயா்நிலைக் குழு ஒன்றை அரசு அமைத்தது. 

இக்குழுவானது அதுதொடா்பான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதுடன், பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளைக் கேட்டிருந்தது. அதன்படி, சுமாா் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து இருந்தனா். அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிபதி ராஜன் குழு சமா்ப்பித்தது. இதற்கிடையே, சட்டப் பேரவையில் நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றி, அதனை ஆளுநா் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. 

மேலும் நீட் பாதிப்பு தொடா்பாக 12 மாநில முதல்வா்களுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அண்மையில் கடிதமும் எழுதியுள்ளார். இந்த நிலையில் நீட் தேர்வு தாக்கம் குறித்த ஏ.கே.ராஜனின் அறிக்கை தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி என 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அறிக்கையை மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதல்வர் ஸ்டாலினிடம் இன்று வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com