பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு - ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுண்ட அணையிலிருந்து சுமார் 3 ஆயிரம் கன அடி அளவு உபரி நீர் பொன்னை ஆற்றில் வெளியேற்றப்பட்டு உள்ளது.
ஆகவே பொன்னை ஆறு மற்றும் பாலாற்று பகுதிகளில் மக்கள் யாரும் குளிக்கவும், பார்வையிடவும் செல்ல வேண்டாம்.
மேலும் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.