சிறப்புக் குழந்தைகளுக்கான சங்கல்ப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பூந்தமல்லி அருகில் கோலப்பன்சேரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சங்கல்ப் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சிறப்புக் குழந்தைகளுக்கான சங்கல்ப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

பூந்தமல்லி அருகில் கோலப்பன்சேரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சங்கல்ப் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு, காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சங்கல்ப் பள்ளி சுமார் 20 ஆண்டுகளாக சிறப்பு குழந்தைகள் வாழ்வின் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 200 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்திடும் வகையில் இப்புதிய சங்கல்ப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. 
மேலும், இப்பள்ளியில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிசியோதரபி சிகிச்சை, பேச்சுப்பயிற்சி சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், அக்குழந்தைகள் சுயமாக வாழ்வை நடத்திடும் வகையில், தொழிற்கல்வி பயிற்சி மூலம் நகை தயாரிப்பு, பரிசுப் பொருட்கள் தயாரிப்பு, நெசவுத் தொழில், டேடா என்டரி, சோப்பு தயாரிப்பு, மசாலா பொருட்கள் தயாரிப்பு, முகக்கவசம் தயாரிப்பு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் போது, முதல்வர், சங்கல்ப் பள்ளியை சிறப்பான முறையில் நடத்தி வருவதற்காக அப்பள்ளி நிர்வாகிகளை பாராட்டி, வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சங்கல்ப் நிறுவன அறங்காவலர் டாக்டர் முல்லாசரி அஜித் சங்கர்தாஸ், இயக்குநர்கள் சுபாஷினி ராவ், லட்சுமி கிருஷ்ணகுமார், சுலதா அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com