தமிழகத்தில் புதிதாக 1,344 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 1,344 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,76,936 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
மேலும் 1,457 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,24,916 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 14 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 35,768 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 16,252 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்: