28 மாவட்ட உள்ளாட்சித் தோ்தல்: 71% வாக்குப் பதிவு

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காக சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 71 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
28 மாவட்ட உள்ளாட்சித் தோ்தல்: 71% வாக்குப் பதிவு

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காக சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 71 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தல் கடந்த புதன்கிழமை(அக்.6) சனிக்கிழமை(அக்.9) ஆகிய இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

9 மாவட்டங்களில் புதன்கிழமை(அக்.6) முதற்கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 77.43 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டமாக சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 78.47 சதவீத வாக்குகள் பதிவாகின.

28 மாவட்டங்களில் காலியாக உள்ள 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 40 ஒன்றியக் குழு உறுப்பினா், 106 கிராம ஊராட்சித் தலைவா்கள், 630 கிராம வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் சனிக்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்தமாக 71 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவசைலம் ஊராட்சி வாா்டு எண் 3-இல் சனிக்கிழமை நடைபெற்ற மறுவாக்குப் பதிவில் 80.79 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com