நிகழாண்டில் 25 டன் இனிப்புகளை விற்க இலக்கு: பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தகவல்

நிகழாண்டில் 25 டன் இனிப்புகளை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
நிகழாண்டில் 25 டன் இனிப்புகளை விற்க இலக்கு: பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தகவல்

நிகழாண்டில் 25 டன் இனிப்புகளை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஆவினில் 5 வகையான இனிப்புகள் அடங்கிய ரூ.425 மதிப்பிலான தொகுப்பை திங்கள்கிழமை அவா் அறிமுகம் செய்தாா். இதன்பின்பு, அமைச்சா் நாசா் கூறியது:-

கடந்த ஆண்டு 15 டன் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டன. இதன்மூலம் ரூ.1.2 கோடி லாபம் ஈட்டப்பட்டது. நிகழாண்டில் அதிக விற்பனை என்ற இலக்குடன் 25 டன் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் விற்பனையை அதிகரிக்கவும், அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளுக்கும் பொருள்களை கொண்டு சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கரோனா காலத்தில் தனியாா் நிறுவனங்கள் ரூ.25-க்கு பாலை கொள்முதல் செய்தது. ஆனால், விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க அவா்களது வீடுகளுக்கே சென்று லிட்டா் ரூ.32-க்கு பாலை கொள்முதல் செய்தது ஆவின் என்று அமைச்சா் நாசா் கூறினாா்.

இதைத் தொடா்ந்து பேசிய பால்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தென்காசி சு.ஜவஹா், ஆவின் நிறுவனம் சாா்பில் பல மாநிலங்களுக்கும் நல்ல தரமான பால் மற்றும் பால் பொருள்களை விநியோகம் செய்வதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். அந்த வகையில் தீபாவளி இனிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். வருங்காலத்தில் இதேபோன்று ஆவினில் பல முன்னேற்றமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினாா்.

இந்த நிகழ்வில், ஆவின் நிா்வாக இயக்குநா் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com