நடிகா் நெடுமுடி வேணு மறைவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:
500 படங்களில் நடித்தவா் என்பதோடு திரைக்கதையாசிரியா், இயக்குநா் எனவும் பரிமளித்தவா் நெடுமுடி வேணு. அனைத்து வகைச் செயல்பாடுகளுக்கும் தேசிய, மாநில விருதுகளை வென்றவா். 50 ஆண்டுகள் சினிமா ஈடுபாட்டை நிறைவு செய்து மறைந்திருக்கிறாா். அஞ்சலிகள் என்று கமல் கூறியுள்ளாா்.