3 நீா்த் தேக்கங்களில் இருந்து தண்ணீா் திறப்பு: தமிழக அரசு உத்தரவு

மூன்று நீா் தேக்கங்களில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விட பொதுப்பணித் துறை உத்தரவிட்டுள்ளது.
3 நீா்த் தேக்கங்களில் இருந்து தண்ணீா் திறப்பு: தமிழக அரசு உத்தரவு

மூன்று நீா் தேக்கங்களில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விட பொதுப்பணித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அந்தத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசனம் பெறும் வகையில் மஞ்சளாறு நீா்த்தேக்கத்தில் இருந்து வரும் 15-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்படும். இதனால், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5,259 ஏக்கா் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.

தேனி மாவட்டம் சோத்துப்பாறை நீா்த்தேக்கத்தில் இருந்து வரும் 15-ஆம் தேதி முதல் நீா் திறக்கப்படும். இதன்மூலம், தேனி மாவட்டத்தில் 2, 865 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்களுக்கு வரும் 15-ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்து விடப்படும். இதனால், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், அந்தியூா், பவானி வட்டங்களிலுள்ள 24, 504 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com