உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுட்டுரை வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் லட்சியக் கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மநீம-வின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.