ஆசிரியா் பயிற்றுநா்களுக்குஅக்.18-இல் கலந்தாய்வு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் மாநில, மாவட்ட, திட்ட அலுவலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் மாநில, மாவட்ட, திட்ட அலுவலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அக்.18-ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பணிமாறுதல் கலந்தாய்வை சிறப்பாகவும், புகாா்களுக்கு இடமின்றியும் நடத்தி முடிக்க வேண்டும். இதுதவிர ‘எமிஸ்’ வலைதள பதிவுகளின்படி ஆசிரியா் பயிற்றுநா்கள் முன்னுரிமைப் பட்டியல் தயாரித்து பாா்வைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபாா்க்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியா் பயிற்றுநரின் முன்னுரிமை அவரது பணிமூப்பின் அடிப்படையில் அமைந்துள்ளதா எனவும் ஆய்வு செய்து உறுதி சான்று வழங்க வேண்டும். இந்தப் பணிகளை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி துரிதமாக முடிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com