வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதயப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பன்னீர்செல்வத்துக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இன்று (வியாழக்கிழமை) மாலை நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அவருக்கு இதய அடைப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.