சிறந்த பட்டு நூற்பாளா்களுக்குரொக்கப் பரிசுகள்: அரசு உத்தரவு

சிறந்த பட்டு நூற்பாளா்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

சிறந்த பட்டு நூற்பாளா்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஏற்கெனவே சட்டப் பேரவை கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். மாவட்ட அளவில் 37 மாவட்டங்களில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகளுக்கு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் அளிக்கப்படும்.

மாநில அளவில் சிறந்த விவசாயிகளுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகிய பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான நிதிகளை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com