நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளருமான கமல்ஹாசன் அப்துல் கலாம் காந்திக்குப் பிறகான தேசப்பிதா என தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிக்க | அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 90-வது பிறந்தநாளான இன்று பல்வேறு தலைவர்களும் அவருடைய கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் 'நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்’ என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.