ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 90 ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஐயா கலாம், நேரிய வழியில் உழைத்து முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர்.
இதையும் படிக்க | நாட்டை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கலாம்
பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநா இன்று, அவர் வழி நின்று அறவழி செல்வோம் என்று கமல் கூறியுள்ளார்.