பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சுதாகரன் இன்று விடுதலையானார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சுதாகரன் 89 நாள்களுக்கு முன்னதாகவே விடுதலையானார். 2017 முதல் சிறையிலிருந்த சசிகலா, இளவரசி ரூ.10 கோடி அபராதம் செலுத்தியதால் 2021 ஜன.21-ல் விடுதலையாகினர்.
சுதாகரன் மட்டும் அபராதம் செலுத்தாததால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.
அடுத்தாண்டு பிப். வரை சிறையில் இருக்கவேண்டிய நிலையில் 89 நாள்கள் முன்னதாகவே சுதாகரன் இன்று விடுதலையானார்.